Showing posts with label அறியாததால். Show all posts
Showing posts with label அறியாததால். Show all posts

ரஷ்யா உதவியுடன், இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள்

மாஸ்கோ : 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்திய ராணுவத்துக்காக, 140 அதிநவீன ஹெலிகாப்டர்களை தயாரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரஷ்யாவுடன், 6,500 கோடி ரூபாய் மதிப்பில், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நனவாக்க அரசு தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'மேக் இன் இந்தியா' என்ற பெயரில், இந்தியாவில் பொருட்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறது.


ஆர்வம்


ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் போர் தளவாடங்களை, உள்நாட்டில் தயாரிப்பதில், மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த, 2015 டிசம்பரில், பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது, 6,500 கோடி ரூபாய்மதிப்பில், இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்காக, 200 அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.

'கமோவ் - 226டி' எனப்படும், அந்த ஹெலிகாப்டர்களில், 60 ஹெலிகாப்டர்கள், தயார் நிலையில், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட உள்ளன.மீதமுள்ள, 140 ஹெலிகாப்டர்களை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திய ராணுவத்திடம் நீண்ட காலமாக, 'சீட்டா, சேடக்' எனப்படும், போர் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக, நவீன வசதிகள் செய்யப்பட்ட, 'கமோவ்' ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.
அக்டோபரில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ், ரோஸோபரோனெக்ஸ்போர்ட் ஆகிய இரு நிறுவனங்கள், கூட்டு முயற்சியில், ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளன.


ஒப்பந்தம்


இது தவிர, இந்திய கடற்படைக்காக, ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து, 111 பிரமாண்ட ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 'நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்' என, நிபுணர்கள் கருதுகின்றனர்.


4 கட்டங்களாக தயாரிப்பு பணி


'கமோவ்' ஹெலிகாப்டர் தயாரிப்பு பணி, நான்கு கட்டங்களாக நடக்க உள்ளதாக, 'கமோவ் - 226டி' ஹெலிகாப்டர் தயாரிப்பு திட்ட இயக்குனர், டிமிட்ரி ஸ்வெட்ஸ் கூறினார்.

நிருபர்களிடம், டிமிட்ரி ஸ்வெட்ஸ் கூறியதாவது: ரஷ்யா - இந்தியா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, கமோவ் - 226டி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தப்படி, ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழில்நுட்பமும், இந்தியாவுக்கு மாற்றித் தரப்படும். நான்கு கட்டங்களாக, இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்க, திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் பாகங்கள், இந்தியாவுக்கு, 'டெலிவரி' செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில், கூட்டு தயாரிப்பில் உருவான பாகங்கள் டெலிவரி செய்யப்பட்டு,


இந்தியாவில் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கும். தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உதவிகள் அளிக்கப்படும்.

மூன்றாவது கட்டத்தில், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்ட மூலப்பொருட்களை வைத்து, உற்பத்தி மற்றும் கட்டுமான பணிகள் நடக்கும். நான்காவது கட்டமாக, முழுமையான ஹெலிகாப்டர் உருவாக்கப்படும். இது தவிர, ஹெலிகாப்டர் பராமரிப்பு மையம், சேவை மையம், இந்தியாவில் நிர்மாணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சிறந்த பலன் கிடைக்கும்


ரஷ்யாவைச் சேர்ந்த, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவன தலைவர், ஆண்ட்ரே போகினிஸ்கி,நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய கடற்படைக்கு, 111 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றுடன், 'கமோவ் - 226டி' ஹெலிகாப்டர்களை, இந்திய கடற்படை பயன்படுத்தினால், சிறப்பான பலனை பெற முடியும்.

கமோவ் ஹெலிகாப்டர்களை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்தியாவில் தயாரிப்பதற்கான பணியில், நாங்கள் உதவுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Share:

ஒருவரது குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?

முதன் முறையாக ஒருவரை சந்திக்கும் போது, அவர் எப்பேற்பட்டவர் என்பதை முன்பே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். சிலர் ஒருவருடன் பேசும் முன்பே அவரது குணம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிப்பார்கள். அது எப்படி என்று தெரியுமா?

அதற்கு அவர்களின் ஒருசில நடவடிக்கைகள் அல்லது செயல்கள் தான் காரணம்.

கையெழுத்து

ஒருவரின் பெர்சனாலிட்டி அவரின் கையெழுத்திலேயே தெரியும். அதுவும் அவர்கள் எழுதும் விதம் மற்றும் எழுத்துக்களின் அளவைக் கொண்டு சொல்ல முடியும் என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதில் சிறிய கையெழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்களாம்.

அதுவே பெரிய கையெழுத்துக்களை கொண்டவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்களாம். மேலும் யார் ஒருவர் எழுதும் போது அதிக அழுத்தத்தைக் கொடுத்து எழுதுகிறார்களோ, அவர்கள் எதிலும் மிகுந்த அக்கறையுடனும், அழுத்தம் கொடுக்காமல் லேசாக எழுதுபவர்கள் ஒற்றுணர்வு உள்ளவர்களாகவும், மிகவும் சென்சிடிவ்வானவர்களாகவும் இருப்பார்கள்.

நிறம்

அடிக்கடி தேர்ந்தெடுத்து அணியும் உடையின் நிறத்தைக் கொண்டும், ஒருவரைப் பற்றி சொல்ல முடியும். அதில் யார் அதிகமாக கருப்பைப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மிகவும் சென்டிவ்வானவர்கள் மற்றும் எதிலும் அக்கறையுடன் செயல்படுவார்கள்.

சிவப்பு நிற உடைகளை அணிபவர்கள் வாழ்க்கை முழுமையாக வாழ்வார்கள் மற்றும் பிடிவாத குணமுள்ளவர்கள், எடுத்த காரியத்தை முடிப்பதில் தீர்மானமாக இருப்பார்கள். அதுவே பச்சை நிறம் விசுவாசத்தையும், பாசத்தையும் குறிக்கும். நீலம் நிலைமாறாத் தன்மை, சென்சிடிவ் மற்றும் மற்றவர்கள் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர்.

நகங்களைக் கடிப்பது

ஒரு சூழ்நிலையைக் கையாளும் போது நம் உடல் ஒருசில செயல்களை தானாக செய்யும். அதாவது முடியை சுழற்றுவது அல்லது நகங்களைக் கடிப்பது போன்றவை. இச்செயல்களை பொறுமையின்மை, விரக்தி, சலிப்பு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும்.

அதிலும் நகங்களைக் கடிப்பவர்கள் பரிபூரணத்துவ குணத்துடன் இருக்க விரும்புவார்கள், அதே சமயம் அதிகமாக பதற்றமாவார்கள்.

நேரந்தவறாமை

ஒருவரின் நேரந்தவறாமை குணம் அவரைப் பற்றி கணிக்க உதவும். உதாரணமாக, ஒருவரை சந்திக்க அல்லது இன்டெர்வியூவிற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்றால், அது நம்மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். அதுவே தாமதமாக சென்றால், அது அவர்களின் மீது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

கை குலுக்குவது

ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் ஓர் முறையான கை குலுக்குவதைக் கொண்டும் அவரது குணத்தைக் கணிக்க முடியும். அதில் ஒருவர் உறுதியுடன் கைகளை இறுக்கமாக குலுக்கினால், அவர் தன்னம்பிக்கை குணமிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதைக் குறிக்கும்.

அதுவே கை குலுக்கும் போது தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், குறுக்கு வழியில் இலக்குகளை அடைவார்கள் என்பதையும் வெளிக்காட்டும்.

கண்கள்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் குணங்கள் என பல விஷயங்களைச் சொல்லும். கருப்பு நிற கண்களைக் கொண்டவர்களை விட, நீல நிற கண்கள் உள்ளவர்கள், எதையும் அவ்வளவு எதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்றும் பெரும் குடிகார்களாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.



அதுமட்டுமின்றி ஒருவருடன் பேசும் போது அவர்களது கண்களைப் பார்த்து பேசாமல் எங்கேயோ பார்த்து பேசினால், அது அவர்களுக்கு சுய-கட்டுப்பாடு குறைவாக இருப்பதை வெளிக்காட்டும்.
Share:

ஒருவரது குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?

முதன் முறையாக ஒருவரை சந்திக்கும் போது, அவர் எப்பேற்பட்டவர் என்பதை முன்பே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். சிலர் ஒருவருடன் பேசும் முன்பே அவரது குணம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிப்பார்கள். அது எப்படி என்று தெரியுமா?

அதற்கு அவர்களின் ஒருசில நடவடிக்கைகள் அல்லது செயல்கள் தான் காரணம்.

கையெழுத்து

ஒருவரின் பெர்சனாலிட்டி அவரின் கையெழுத்திலேயே தெரியும். அதுவும் அவர்கள் எழுதும் விதம் மற்றும் எழுத்துக்களின் அளவைக் கொண்டு சொல்ல முடியும் என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதில் சிறிய கையெழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்களாம்.

அதுவே பெரிய கையெழுத்துக்களை கொண்டவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்களாம். மேலும் யார் ஒருவர் எழுதும் போது அதிக அழுத்தத்தைக் கொடுத்து எழுதுகிறார்களோ, அவர்கள் எதிலும் மிகுந்த அக்கறையுடனும், அழுத்தம் கொடுக்காமல் லேசாக எழுதுபவர்கள் ஒற்றுணர்வு உள்ளவர்களாகவும், மிகவும் சென்சிடிவ்வானவர்களாகவும் இருப்பார்கள்.

நிறம்

அடிக்கடி தேர்ந்தெடுத்து அணியும் உடையின் நிறத்தைக் கொண்டும், ஒருவரைப் பற்றி சொல்ல முடியும். அதில் யார் அதிகமாக கருப்பைப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மிகவும் சென்டிவ்வானவர்கள் மற்றும் எதிலும் அக்கறையுடன் செயல்படுவார்கள்.

சிவப்பு நிற உடைகளை அணிபவர்கள் வாழ்க்கை முழுமையாக வாழ்வார்கள் மற்றும் பிடிவாத குணமுள்ளவர்கள், எடுத்த காரியத்தை முடிப்பதில் தீர்மானமாக இருப்பார்கள். அதுவே பச்சை நிறம் விசுவாசத்தையும், பாசத்தையும் குறிக்கும். நீலம் நிலைமாறாத் தன்மை, சென்சிடிவ் மற்றும் மற்றவர்கள் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர்.

நகங்களைக் கடிப்பது

ஒரு சூழ்நிலையைக் கையாளும் போது நம் உடல் ஒருசில செயல்களை தானாக செய்யும். அதாவது முடியை சுழற்றுவது அல்லது நகங்களைக் கடிப்பது போன்றவை. இச்செயல்களை பொறுமையின்மை, விரக்தி, சலிப்பு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும்.

அதிலும் நகங்களைக் கடிப்பவர்கள் பரிபூரணத்துவ குணத்துடன் இருக்க விரும்புவார்கள், அதே சமயம் அதிகமாக பதற்றமாவார்கள்.

நேரந்தவறாமை

ஒருவரின் நேரந்தவறாமை குணம் அவரைப் பற்றி கணிக்க உதவும். உதாரணமாக, ஒருவரை சந்திக்க அல்லது இன்டெர்வியூவிற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்றால், அது நம்மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். அதுவே தாமதமாக சென்றால், அது அவர்களின் மீது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

கை குலுக்குவது

ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் ஓர் முறையான கை குலுக்குவதைக் கொண்டும் அவரது குணத்தைக் கணிக்க முடியும். அதில் ஒருவர் உறுதியுடன் கைகளை இறுக்கமாக குலுக்கினால், அவர் தன்னம்பிக்கை குணமிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதைக் குறிக்கும்.

அதுவே கை குலுக்கும் போது தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், குறுக்கு வழியில் இலக்குகளை அடைவார்கள் என்பதையும் வெளிக்காட்டும்.

கண்கள்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் குணங்கள் என பல விஷயங்களைச் சொல்லும். கருப்பு நிற கண்களைக் கொண்டவர்களை விட, நீல நிற கண்கள் உள்ளவர்கள், எதையும் அவ்வளவு எதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்றும் பெரும் குடிகார்களாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

அதுமட்டுமின்றி ஒருவருடன் பேசும் போது அவர்களது கண்களைப் பார்த்து பேசாமல் எங்கேயோ பார்த்து பேசினால், அது அவர்களுக்கு சுய-கட்டுப்பாடு குறைவாக இருப்பதை வெளிக்காட்டும்.

Share:

தமிழன்டா இவன் தமிழன்டா

தமிழன்டா இவன் தமிழன்டா
இதில் பண்டைய தமிழின் சிறப்பையும், தமிழ் அரசர்களின் திறமையையும் மற்றும் தமிழ் பழைய தலைவர்களை பற்றிய ஒரு நவீன பாடல் பாருங்கள்
Share:

தமிழன்டா இவன் தமிழன்டா

தமிழன்டா இவன் தமிழன்டா
இதில் பண்டைய தமிழின் சிறப்பையும், தமிழ் அரசர்களின் திறமையையும் மற்றும் தமிழ் பழைய தலைவர்களை பற்றிய ஒரு நவீன பாடல் பாருங்கள்
Share:

தமிழில் அறிவியல் - Dr.சுப்பராமன்

தமிழரும் அறிவியல் சிந்தனைகளும்
Share:

தமிழில் அறிவியல் - Dr.சுப்பராமன்

தமிழரும் அறிவியல் சிந்தனைகளும்
Share:

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 
Share:

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 
Share:

Popular Posts