Showing posts with label ஜெருசலேம். Show all posts
Showing posts with label ஜெருசலேம். Show all posts

''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்

சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார்.
ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த பிறகு முஸ்லிம்கள் மற்றும் அரபு உலகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு இக்கருத்தைக் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.
ஜெருசலேமில், மத்திய பேருந்து நிலையத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு வீரரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய ஒரு பாலத்தீனியர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் உடனான பேச்சுவார்த்தைக்கும் பிறகு பேசிய பெஞ்சமின் நெதன்யாகு,''ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது'' என கூறினார்.
''இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம்'' என கூறினார்.
''எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும்'' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
''இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால், விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்'' எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது 'துரதிருஷ்டவசமானது' என மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் மூத்த கிறித்துவ மற்றும் முஸ்லிம் மதகுருக்களும், மைக் பென்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளனர்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்துள்ளன. ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.
ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.
Share:

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் போராட்டம் என்ன?

"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர்.
"நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து தற்போது இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். இப்போது இது என்னுடைய நாடு. ஆனால், இந்தியாவுடனான எனது பாசத்தை இதனோடு ஒப்பிட முடியாது. "
மும்பைக்கு அருகே உள்ள தானேவின் ஸ்ரீராங் சொசைட்டியில் ஷெர்லி வாழ்ந்து வந்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் குடியேறினார். இப்போது இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஒன்றான கெதராவில் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் கல்வித் துறையின் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார்.இஸ்ரேலில் குடியேறுவதற்கு முன்பு, நான் இங்கு சுற்றுப்பயணத்திற்காக வந்தேன். என்னுடைய பல உறவினர்கள் இங்கு வசித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, இந்த நாட்டை வாய்ப்புகள் குவிந்துள்ள இடமாக பார்த்தேன். எனவே இங்கேயே குடியேற முடிவு செய்தேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.ஒரு நாட்டை சுற்றுலா பயணியாக பார்வையிடுவதற்கும், அந்நாட்டின் குடிமகனாக மாறுவதற்கும் அதிகளவிலான வித்தியாசம் உள்ளது. அதற்கான வேறுபாட்டை விரைவிலேயே உணர்ந்தார் ஷெர்லி.
"மிகப்பெரிய சவாலே பேசும் மொழிதான். நாங்கள் யூதர்களாக இருந்தாலும், மற்ற இந்தியர்களை போன்று மராத்தி, ஹிந்தி அல்லது ஆங்கிலம் போன்ற மொழிகளையே பேசுகிறோம். ஆனால் இங்கே இஸ்ரேலில், ஹீப்ரு கட்டாயமாகும். உங்களுக்கு ஹீப்ரு தெரியாவிட்டால் நீங்கள் முற்றிலும் முடங்கி விடுவீர்கள்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"எனவே, நான் அரசு நிதியில் செயல்படும் அடிப்படை ஹீப்ரு கற்றல் திட்டமொன்றில் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு என் சொந்த பணத்தை செலவிட்டு, ஹீப்ரு மொழியை கற்றுக்கொண்டேன். ஒரு இஸ்ரேலிய குடிமகனாக ஆவதற்குரிய போதுமான தகுதியை பெற்றேன்" என்று தனது தொடக்ககால சிரமங்களை நினைவுக் கூறுகிறார்.
மொழி மட்டுமல்லாது, சவால்கள் அனைத்து முனைகளிலும் இருந்தன. உணவு, உடை, பழக்கவழக்கம் மற்றும் மரபுகள்... என நீங்கள் எந்தவொரு காரியத்தை குறிப்பிட்டாலும் அது சவாலான விடயமாகவே இருந்தது. ஆனால் பெனி இஸ்ரேலியர்களை (இந்திய யூதர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை) போலவே, அந்த சவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார். ஆனால், இஸ்ரேலில் உள்ள யூதர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தை பழக்கப்படுத்தி கொள்வதே சிறந்த வழியாகும்.
"நாங்கள் இன்னும் எங்களது பாரம்பரியங்களை பராமரித்து வருகிறோம். பெனி இஸ்ரேலியர்களின் தனித்துவமான மரபுகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம் " என்று கூறி பெருமிதமடைகிறார் ஷெர்லி."கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் யூதர்கள் தரம் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். பல நாடுகளில் அவர்கள் கொடுமைகளை எதிர்கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்களது நாடுகளை மறக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பதை விரும்பவில்லை."
"ஆனால், பெனி இஸ்ரேலியர்களான நாங்கள் அதில் மாறுபட்டவர்கள். இந்தியா எங்களை மரியாதையுடனும், அன்புடனும் உபசரித்தது. நாங்களும் அதே உணர்வை திரும்ப அளிக்கிறோம்" என்று தான் இந்தியா மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை ஷெர்லி வெளிப்படுத்துகிறார்.ஷெர்லி பால்கர் மட்டும்தான் இஸ்ரேலில் குடியேறிய மராத்தி மொழி பேசும் பெனி இஸ்ரேலிய யூதர் அல்ல. மராத்தி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் பேராசிரியர் விஜய் தபாஸ். இவரது பயணமே 1948ம் ஆண்டு உருவான இந்த யூத தேசத்திற்கு மராத்திய யூதர்கள் தங்களது "நம்பிக்கையளிக்கும் நாட்டிற்கு" புலம்பெயரத் தொடங்கிய வரலாறு குறித்து தெரிய வருகிறது. பீர்ஷெவா, அஷ்டோட் அஷ்கலோன், லோட், ராம்லே, எருஹம், டிமோனோ, ஹைபா போன்ற இஸ்ரேலிய நகரங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெனி இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர்.ஆனால், இது பெனி இஸ்ரேலியர்களின் முதல் குடிபெயர்வு இல்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அந்நேரத்தில் அது தலைகீழ் இடம்பெயர்வாக இருந்தது. அதாவது, இஸ்ரேலிலிருந்து மகாராஷ்டிராவுக்கு!
இன்றைய மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் இஸ்ரேலில் துன்புறுத்தலுக்குள்ளான யூத குடும்பங்களைச் சுமந்து வந்த கப்பல் உடைந்தது. அவ்விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் நவ்கோனை என்ற கிராமத்தின் கரையை வந்தடைந்தார்கள்.
அவர்கள் தங்களது அன்புக்குரியவர்களை அதே கிராமத்தில் அடக்கம் செய்தார்கள். இதுதான் இந்தியாவில் யூதர்களின் முதல் மயான இடமாகும்.
ராய்காட் மாவட்டத்திலுள்ள உள்ளூர் மக்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கு இவர்களின் மொழியும், அசாதாரண பழக்கங்களும் போதுமானதாக இருந்தது.இவர்கள் அவ்விடத்தை வந்தடைந்தபோது "நாங்கள் பெனி இஸ்ரேலியர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
"ஹீப்ரு மொழியில் பெனி என்றால் மகன் என்று அர்த்தம். எனவே, இந்த சமூகம் தங்களை தாங்களே 'இஸ்ரேலின் மகன்கள்' என்று அழைத்துக் கொண்டது" என்கிறார் ருயா கல்லூரியின் வரலாறுத்துறை பேராசிரியரான மொஹசினா முகடம்.
கொங்கன் பகுதியில், பெனி இஸ்ரேலியர்கள் ஷான்வர் டெலிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலத்தில் 'ஷானிவார்' என்றால் 'சனிக்கிழமை' என்றும் தெலி என்பது எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்பவர்களையும் குறிக்கும்.
மகாராஷ்டிராவின் யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் (பெனி இஸ்ரேல்) ஷானிவர் டெலிஸ் என்று அறியப்படுகின்றனர். யூதர்களின் வழக்கத்தின்படி வாரத்தின் ஏழாவது நாளாக சனிக்கிழமையை கருதி அதை ஷப்பாட் என்று அழைப்பதுடன் அன்று பணிபுரிவதை தவிர்க்கின்றனர்.பெனி இஸ்ரேலியர்கள், இந்திய மண்ணில் தங்கள் கால்களை வைக்கும் முன் அவர்கள் எதிர்கொண்ட நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, அவர்களின் புனித நூல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யம் அளிப்பதாக இல்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாக மத நூல்களுடன் எவ்வித தொடர்பையும் கொள்ளவில்லை. யூத பாரம்பரியங்களை தங்களது மனதில் நிலை நிறுத்தியவர்கள் அதை பின்தொடர்ந்தார்கள்.
பிரிட்டிஷ் தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது, கொங்கன் பகுதியிலிருந்து பல பெனி இஸ்ரேலியர்கள் மும்பைக்கு வந்தனர். 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த யூதர்கள் தங்களின் 'நம்பிக்கையளிக்கும் தேசத்திற்கு' திரும்பி வரும்படி முறையீடு செய்யப்பட்டது. இந்த அழைப்பை ஏற்ற பல பெனி இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், இஸ்ரேலில் குடியேறிய பின்னரும் கூட, அவர்கள் தங்களின் மகாராஷ்டிர கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
இரண்டு கலாச்சாரங்களின் கலப்பு
"முந்தைய பெனி இஸ்ரேலியர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாக காணப்படவில்லை. ஆனால், இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த மக்களின் சில அசாதாரண பாரம்பரியங்களை உற்றுநோக்கினர். யூதர்கள் மீன்களை செதில்களோடு மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்யவில்லை. அவர்களின் சமையல் முறை வேறுபட்டது. விலங்குகளை கொல்லும் முறை கூட தனித்துவமானது. இவற்றையெல்லாம் கவனித்த பிரிட்டிஷ்காரர்கள் இம்மக்கள் யூதர்கள் என்று உணர்ந்து கொண்டனர்" என்கிறார் மொஹசினா முகடம்.
"பிரிட்டிஷ் சகாப்தத்தில் பெனி இஸ்ரேலியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அவர்கள் இராணுவம், ரயில்வே, மருத்துவ சேவைகள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றினர்" என்று புனேவில் உள்ள பெனி இஸ்ரேலியரான சாமுவேல் ரோஹெர்கார் கூறுகிறார்.
"அவர்கள் மும்பைக்கு வந்தபோது, இன்றைய மஸ்ஜித் நிலையத்திற்கு அருகே ஒரு யூத வழிபாட்டு தலத்தை கட்டினார்கள்" என்கிறார் சாமுவேல்.
"யூத வழிபாட்டு தலத்தில் எந்த சிலையையும் உங்களால் காண முடியாது. எங்கள் புனித நூல்களை ஒரு அலமாரியில் வைத்திருக்கிறோம். அந்த அலமாரியானது மேற்குப்புறத்தில் வைக்கப்படும். ஹீப்ருவில் இந்த புத்தகங்களை 'செபர் டோரா' என்று அழைத்தார்கள். ஒரு மாதத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமையன்று புனித நூல்களை அவர்கள் ஓதினார்கள்" என்று சாமுவேல் கூறுகிறார்.
மாலிடாபெனி இஸ்ரேலியர்கள் பல இந்து மரபுகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றினர். உதாரணமாக, திருமண சடங்குகள் அல்லது வளையல்கள் போன்றவை இந்து மரபுகளிலிருந்து எடுக்கப்பட்டன.
யூதர்களின் திருமண விழாக்களில் வழங்கப்படும் திராட்சை மதுவுக்கு சிறப்பிடம் உண்டு. அவர்கள் இந்த மதுவை கிதுஷ் என்று அழைக்கிறார்கள். யூதர்களின் கொண்டாட்டங்களில் கிதுஷுக்கு சிறப்பிடம் இருக்கிறது. திருமண விழாவில் கிதுஷ் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பெனி இஸ்ரேலியர்களது சிறப்பு பண்டிகை உணவாக 'மாலிடா' என்பது உள்ளது. இது மராத்திய இந்து மதத்தின் பாரம்பரியமான 'சத்யநாராயண்' போன்ற செயற்பாட்டை கொண்டது. இது ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் செய்யப்படுகிறது."பெனி இஸ்ரேலியர்களுக்கும் மற்ற யூதர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஷெர்லி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். "மற்ற நாடுகளில் யூதர்கள் அட்டூழியங்களுக்கு உள்ளானார்கள். எனவே, அவர்கள் உள்ளூர் மக்களுடன் இணையவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அது வேறுபட்ட பின்புலத்தை கொண்டது. இந்தியர்கள் எங்களுக்கு மரியாதையுடனும் மற்றும் கண்ணியத்துடன் நடத்தினார்கள். எனவே, நாங்கள் மற்ற இந்திய சமூகங்களோடு இணைந்தோம். அதன் காரணமாக மற்ற சமூகத்தினரின் மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் எங்களுடையதானது" என்று ஷெர்லி பால்கர் கூறுகிறார்.
மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்
முதன் முதலில் இஸ்ரேலுக்கு சென்ற பெனி இஸ்ரேலியர்கள் மராத்தி மொழியை நன்றாக பேசக்கூடியவர்கள். ஆனால், அவர்களது புதிய தலைமுறை மராத்தி மொழியை நன்றாக பேசுவதில்லை. எனவே, பெனி இஸ்ரேலிய சமூகத்தினர் மராத்தி கற்றல் படிப்புகளை துவங்கினர்.
இதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் விஜய் தபாஸ் மும்பையில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றார். "பெனி இஸ்ரேலியர்களுக்கு மராத்தி மீது பெரும் மரியாதை உண்டு. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல யூத வழிபாட்டுத் தலங்களுக்கு இம்மக்களால் நிதியளிக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.பல ஆண்டுகளாக இஸ்ரேலில் தங்கிய பின்னரும் கூட, பெனி இஸ்ரேலியர்களுக்கு இந்தியா குறித்து தங்கள் மனதில் சிறப்பிடம் உண்டு. "எங்கள் இதயத்தின் தனியிடத்தில் இந்தியா உள்ளது. நாங்கள் இன்னும் அங்கே போகிறோம். சமீப காலம் முன்னர்வரை என் பெற்றோர் தானேயில் இருந்தார்கள். என் சகோதரி மும்பையில் இருக்கிறார். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம், 'சாப்பிட வேண்டிய' உணவு வகைகள் குறித்த பட்டியலை தயார் செய்கிறேன். வாடா-பாவ் மற்றும் சாட் பொருட்களை நான் விரும்புகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
அவளுடைய பெற்றோர் சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால், அங்குள்ள மாற்றத்தை சமாளிக்கப்பதற்கு அவர்களுக்கு கடினமாக உள்ளது.
அவருடைய மகள் இஸ்ரேலில் பிறந்தாள். அவரால் மராத்தி மொழியை பேச முடியும். ஆனால், இனி எப்போதுமே இந்தியாவில் இருப்பதற்கு அவர் விரும்பவில்லை.
டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து
"ஜெருசலேம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள மராத்திய யூதர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்னரும், இப்போதும் ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகரம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விடயங்கள் விரைவாக மாற்றப் போகின்றன. ஜெருசலேம் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொள்ள போகிறது, அதற்காக நான் கவலைப்படுகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஜெருசலேமில் நிலைமை எப்போதும் பதட்டமாக இருக்கிறது. மேலும், சமீபத்திய நிகழ்வுகள் வன்முறையை தூண்டலாம். ஆனால் நாங்களும், எங்களது இராணுவமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்" என்கிறார் ஜெருசலேம் நகரத்தை சேர்ந்த மராத்தி யூதரான நோவா மசில்.
Share:

டிரம்ப்புக்கு எதிராக இந்தோனேசியாவில் கொந்தளிப்பு

பாலி: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அரபு நாடுகளும் அவருக்கு எதிராக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருந்தது.
தற்போது உலகின் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் பெரிய மக்கள் போராட்டமே வெடித்து இருக்கிறது.
தலைநகர்
தலைநகர் பிரச்சனை
டெல் அவிவ் என்ற சிறிய பகுதியே இவ்வளவு நாட்களாக இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாக எந்த அதிகாரத்தையும் வழங்காது எனினும் புவியியல் ரீதியாக நிறைய அதிகாரங்களை வழங்கும். இது தற்போது பெரிய பிரச்னையை உருவாக்கி இருக்கிறது.
போராட்டம் வெடித்தது
போராட்டம்
இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ள முடியாது என உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மக்கள் போராட்டம் செய்ய ஆர்மபித்தனர். அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னர் இன்று காலையில் இருந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்கள் இதயம்
எங்களுடைய இதயம்
இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இஸ்ரேலில் இருக்கும் முஸ்லிம்களும், ஜெருசலேமை நம்பி இருக்கும் பாலஸ்தீனமும் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று இந்தோனேசியா மக்கள் பேசியுள்ளனர். மேலும் 'பாலஸ்தீனம் எங்கள் இதயம்' என்ற பதாகைகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது.
அமைதி போகிறது
அமைதிக்கு கேடு
மேலும் அந்த நாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி ''அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து உலகத்தின் அமைதியை போக்குகிறது. மக்களை நிம்மதியாக இருக்கவிட கூடாது என்று டிரம்ப் வேலை செய்கிறார். இதுகுறித்து அனைத்து நாடுகளும் பேச வேண்டும். முக்கியமாக ஐநா சபையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
Share:

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் பதிலடியில் 2 தீவிரவாதிகள் பலி

காசா சிட்டி: ஜெருசலம் நகர விவகாரத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியானார்கள். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காசா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கி வந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், காசா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் மூன்று ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்தினர்.

அவற்றில் ஒரு ராக்கெட் இஸ்ரேல் நாட்டின் தென்நகரமான ஸ்டெராட் மீது விழுந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் நேற்று காலை காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தின. காசா நகரின் மத்திய பகுதியில் உள்ள நுசெய்ரட் நகரின் மீது தாழ்வாக பறந்துசென்ற போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் இரண்டு ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு, ராணுவ முகாம் ஆகியவை நாசம் அடைந்ததாகவும், ஹமாஸ் போராளிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை மொத்தம் 4 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பாலஸ்தீனம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு வரை ஜோர்டான் வசமிருந்த  கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் 1980ல்  இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலம் நகரில் யூத,  கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும்  இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறி அமைத்த  வசிப்பிடங்களில் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
Share:

டிரம்ப் முடிவுக்கு எதிராக, கிளர்ந்தெழுந்த ஐரோப்பிய நாடுகள்

அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த தூதர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்த முடிவு ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்துக்கு பொருத்தமற்றது. மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்கு இதனால் நன்மை ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share:

அமெரிக்காவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம்

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இது ஒரு "வரலாற்று சிறப்புமிக்க நாள்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
'இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்': டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்?
டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. ஜெருசலேம் குறித்த சர்ச்சை இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.
என்ன முக்கியத்துவம்?
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..
பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.
ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுவரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.
யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.
பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
'இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்' : டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
'வரலாற்று சிறப்புமிக்க நாள்'
டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது," என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Share:

இஸ்ரேலின் தலைநகராக, ஜெருசலேமை அறிவித்தார் ட்ரம்ப்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
“இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார்.
இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சார்பு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் புதிய வன்முறைகள் வெடிக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்
Share:

அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும், பிரான்ஸ்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்சை பொருத்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உள்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

Share:

எனது மக்களின் கண் செதில்கள் கழன்று விழ செபியுங்கள்

எனது மக்களின் கண் செதில்கள் கழன்று விழ செபியுங்கள் 
Share:

ANOTHER MAJOR WAR IS PLANNED AGAINST ISRAEL IN 2017

JUDGMENTS OF GOD UPON WESTERN NATIONS WHO ARE AGAINST ISRAEL -- a new skin-eating disease, burning meteor showers in large numbers (Bible tells us this will herald the coming of the Lord Jesus) everywhere burning trees in large areas, volcanoes erupting spewing lava high up in the sky in large quantity and fall on the waters making them bitter and undrinkable.

THE NUMBER 70 IS ALSO VERY SPECIFICALLY CONNECTED WITH ISRAEL

• For Israel, 70 yrs of captivity Babylon, then the 70 weeks in Daniel. 

• Current happenings in Israel - in 2014 Bro. Sadhu was shown by angel Michael a scroll with 1948 (got her independence, became a nation; but war afterwards), 1967 (fought another war where she regained the Golan Heights, West Bank and East Jerusalem) and below the two years was 2017 written on it. In 2017, there is going to be a TURNING POINT in the history of Israel. Her 70 YEARS ARE UP from her formation as a nation (Nov. 29, 1947 when covenant with UN to become a nation was signed). Angel Michael revealed that ANOTHER MAJOR WAR IS PLANNED AGAINST ISRAEL, a major change and shift in government and land is coming. In Dec. 23, 2016, UN passed a resolution against Israel settlements, and the US did not veto it, and in 2017 they plan to divide Israel into Israel and Palestine according to the '67 borders. Israel will be beaten with many stripes. The land will be divided, including Jerusalem, as prophesied in Zech. 1:12-16.
Share:

இஸ்ரேலில் ஒரு சமாதானம் உருவாகும்

இஸ்ரேலில் ஒரு சமாதானம் உருவாகும்
Share:

யூதர்கள் இயேசுவை ஏற்றுகொள்ள செபித்து கொள்ளுங்கள்

 யூதர்கள் இயேசுவை ஏற்றுகொள்ள,அவர்கள் கண்களில் காணபடும்  செதில்கள் அகற்றபட செபித்து கொள்ளுங்கள்
Share:

Elihana & Yaron Yerahmiel Cherniak LIVE - Baruch Haba B'Shem ADONAI

Elihana & Yaron Yerahmiel Cherniak LIVE - Baruch Haba B'Shem ADONAI
Share:

ימין ה ' – אליחנה אליהYemin HaShem - Elihana Elia Tehillim (Psalm 118


Thus says the Lord, “Stand by the ways and see and ask for the ancient paths, Where the good way is, and walk in it; And you will find rest for your souls. But they said, ‘We will not walk in it.’ Jeremiah 6:16 הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ Give thanks to the LORD, for He is good; יֹאמַר-נָא יִשְׂרָאֵל: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. So let Israel now say, for His mercy endureth for ever, מִן-הַמֵּצַר, קָרָאתִי יָּהּ; עָנָנִי בַמֶּרְחָב יָהּ. In danger I called on the Lord; the Lord answered me and set me free. ה ' לִי, לֹא אִירָא; מַה-יַּעֲשֶׂה לִי אָדָם. The LORD is for me; I will not fear; what can man do unto me? עָזִּי וְזִמְרָת יָהּ; וַיְהִי-לִי, לִישׁוּעָה. The LORD is my strength and song; and He is become my Salvation. קוֹל, רִנָּה וִישׁוּעָה--בְּאָהֳלֵי צַדִּיקִים; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. יְמִין יְהוָה, רוֹמֵמָה; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. The voice of rejoicing and salvation is in the tents of the righteous; the right hand of the LORD doeth valiantly. The right hand of the LORD is exalted; the right hand of the LORD doeth valiantly. תהילים פרק קיח א הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ב יֹאמַר-נָא יִשְׂרָאֵל: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ג יֹאמְרוּ-נָא בֵית-אַהֲרֹן: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ד יֹאמְרוּ-נָא יִרְאֵי יְהוָה: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ה מִן-הַמֵּצַר, קָרָאתִי יָּהּ; עָנָנִי בַמֶּרְחָב יָהּ. ו יְהוָה לִי, לֹא אִירָא; מַה-יַּעֲשֶׂה לִי אָדָם. ז יְהוָה לִי, בְּעֹזְרָי; וַאֲנִי, אֶרְאֶה בְשֹׂנְאָי. ח טוֹב, לַחֲסוֹת בַּיהוָה-- מִבְּטֹחַ, בָּאָדָם. ט טוֹב, לַחֲסוֹת בַּיהוָה-- מִבְּטֹחַ, בִּנְדִיבִים. י כָּל-גּוֹיִם סְבָבוּנִי; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יא סַבּוּנִי גַם-סְבָבוּנִי; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יב סַבּוּנִי כִדְבוֹרִים-- דֹּעֲכוּ, כְּאֵשׁ קוֹצִים; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יג דַּחֹה דְחִיתַנִי לִנְפֹּל; וַיהוָה עֲזָרָנִי. יד עָזִּי וְזִמְרָת יָהּ; וַיְהִי-לִי, לִישׁוּעָה. טו קוֹל, רִנָּה וִישׁוּעָה--בְּאָהֳלֵי צַדִּיקִים; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. טז יְמִין יְהוָה, רוֹמֵמָה; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. יז לֹא-אָמוּת כִּי-אֶחְיֶה; וַאֲסַפֵּר, מַעֲשֵׂי יָהּ. יח יַסֹּר יִסְּרַנִּי יָּהּ; וְלַמָּוֶת, לֹא נְתָנָנִי. יט פִּתְחוּ-לִי שַׁעֲרֵי-צֶדֶק; אָבֹא-בָם, אוֹדֶה יָהּ. כ זֶה-הַשַּׁעַר לַיהוָה; צַדִּיקִים, יָבֹאוּ בוֹ. כא אוֹדְךָ, כִּי עֲנִיתָנִי; וַתְּהִי-לִי, לִישׁוּעָה. כב אֶבֶן, מָאֲסוּ הַבּוֹנִים-- הָיְתָה, לְרֹאשׁ פִּנָּה. כג מֵאֵת יְהוָה, הָיְתָה זֹּאת; הִיא נִפְלָאת בְּעֵינֵינוּ. כד זֶה-הַיּוֹם, עָשָׂה יְהוָה; נָגִילָה וְנִשְׂמְחָה בוֹ. כה אָנָּא יְהוָה, הוֹשִׁיעָה נָּא; אָנָּא יְהוָה, הַצְלִיחָה נָּא. כו בָּרוּךְ הַבָּא, בְּשֵׁם יְהוָה; בֵּרַכְנוּכֶם, מִבֵּית יְהוָה. כז אֵל, יְהוָה--וַיָּאֶר-לָנוּ: אִסְרוּ-חַג בַּעֲבֹתִים--עַד קַרְנוֹת, הַמִּזְבֵּחַ. כח אֵלִי אַתָּה וְאוֹדֶךָּ; אֱלֹהַי, אֲרוֹמְמֶךָּ. כט הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ.
Share:

WARNING Message to the UN and to ALL the Nations

WARNING Message to the UN and to ALL the Nations
Share:

HALLELUYAH - PSALM 146

Elihana - Halleluyah
אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו.
עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲשֶׁר-בָּם;
יְהוָה יִמְלֹךְ, לְעוֹלָם- 

הַלְלִי נַפְשִׁי, אֶת-יְהוָה.
אֲהַלְלָה יְהוָה בְּחַיָּי; אֲזַמְּרָה לֵאלֹהַי בְּעוֹדִי.
הַלְלוּ-יָהּ:


HalleluYAH

Ashre she' El Ya'Akov be'ezroh
Sivro al ADONAI Elohav
Oseh shamayim va'aretz
Et hayam ve et kol asher bam 


ADONAI matir asurim 
ADONAI pockeach ivrim, zokef kefufim 
Yatom ve'almana oded
ADONAI Yimloch leolam vaed 

Halleli nafshi et ADONAI
Ahallel'ah ADONAI bechaiyai
Azame'rah Le'Elohai be'odi
HalleluYAH

Blessed are those whose help is the God of Jacob, whose hope is in the LORD their God.
He is the Maker of heaven and earth, the sea, and everything in them—
The Lord sets prisoners free,
the Lord gives sight to the blind,
and sustains the fatherless and the widow
The Lord reigns forever


Praise the Lord, my soul.
I will praise the Lord all my life;
I will sing praise to my God as long as I live.
HalleluYAH
Share:

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 2

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 2 

Share:

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 2

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 2 

Share:

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 1

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 1

Share:

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 1

கர்த்தரின் பாரம் இஸ்ரேல் 2014 MAY 23 பாகம் 1

Share:

Popular Posts