சாவே இல்லாத மனிதர் 2050 ல் இருப்பார்கள்

2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால் உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால் மூளையில் உள்ள நினைவுகள் தான். உடல் ஊனமாகிப் போகும். ஆனால் உண்மையில் மனித வாழ்வு என்பது, ஒருவரின் ஞாபகங்களே ஆகும். மூளை எப்போது இறக்கிறதோ. அன்றே மனிதனும் இறந்துவிடுகிறான் என்று பொருள். ஆனால் பலர் இதனை ஏற்க்க மாட்டார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் மனித மூளையில் உள்ள நினைவு செல்களை அப்படியே காப்பி செய்து. அதனை வைத்திருக்க கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் அதில் பயன் எதுவும் இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சாதனம், மூளையை போல இயங்க வல்லது. எனவே எமது ஞாபங்களை காப்பி செய்து அந்த சாதனத்தினுள் செலுத்தினால் போதும். அந்த மூளை உயிர்பெற்று விடும். இதனூடாக ஒருவர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது இந்த இயந்திரத்தோடு உதடுகளை, கைகளை மற்றும் கால்களை பொருத்தவும்.

செயற்க்கை நியூரான்கள் கொண்டு அசைவுகளை ஏற்பாடுத்தவும் முனைகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இது சாத்தியமாகிவிடும். இனி நாம் காரை வாங்கி வைத்திருப்பது போல இந்த சாதனத்தை வாங்கி, எமது நினைவுகளை மாற்றினால் போதும். எமது உடல் இறந்த பின்னனும் எமது மூளை உயிர்வாழும். இதனால் மனிதன் சாவைக் கடந்தும் வாழப் போகிறான்… இதுவே வருங்கால உண்மை ஆகும்…
Share:

Popular Posts